தமிழ்நாடு

அனுமதியின்றி போராட்டம்: திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்கு

DIN


சென்னை சேப்பாக்கத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி திங்கள்கிழமை அழைப்பு விடுத்தது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் இந்தப் போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். இந்தப் போராட்டம் காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்றதாக தெரிகிறது. இதையடுத்து திருவல்லிக்கேணி போலீஸார், அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின்கீழ் திருநாவுக்கரசர் உள்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT