தமிழ்நாடு

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம்: டிடிவி.தினகரன்

DIN


சட்டப்போராட்டம் மூலம் அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்போம் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் அமமுக உறுதியாக வெற்றி பெறும். அதன்மூலம் தற்போதுள்ள ஆட்சி முடிவுக்கு வரும். முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் வந்து கொண்டிருப்பது, தொடரும் மின்வெட்டு ஆகியவை இந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கான அறிகுறி. தற்போதுள்ள அரசுக்கு மக்கள் மீதும், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலும் அக்கறை இல்லை. அவர்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள எம்.எல்.ஏ-க்களை காப்பாற்றுவதையே முழுக்கொள்கையாக கருதி செயல்பட்டு வருகின்றனர். அமமுக தேர்தலுக்கு தயாராக உள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி உறுதியாகியுள்ள நிலையில், இரண்டாம் இடத்துக்கு தான் ஆளும் கட்சியும், பிரதான கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆளும் கட்சியின் ஊழல் குறித்து திமுகவும் வழக்கு தொடர்ந்துள்ளதால், நாங்கள் சட்டப்போராட்டத்தின் மூலமாக அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்போம். இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதுதான் எங்களது பிரதான நோக்கம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT