நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாகை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான சீ.சுரேஷ்குமார் வழிகாட்டுதலின்படி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிய்ல் அரசுஅதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நாகை அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று கையெழுத்திட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாகை மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.