தமிழ்நாடு

அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

DIN


அண்ணல் அம்பேத்கரின் 129-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

திமுக தலைவர் ஸ்டாலின் குடியாத்தம், சோளிங்கர் இடைத்தேர்தல் தொகுதிகளிலும் மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். அப்போது வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ஸ்டாலின், 

"பிரதமர் மோடி தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள வருமான வரித்துறையை பயன்படுத்துகிறார். 22 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் அடுத்த நொடியே திமுக ஆட்சி மாற்றம் நிகழும்" என்றார்.  

இதனிடையே, சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்டாலின் ஆம்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். 

முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT