தமிழ்நாடு

சொன்னபடியே பிரசாரத்துக்கு வருகிறார் விஜயகாந்த்: இன்று சென்னையில் அவரைப் பார்க்கலாம்

DIN


சென்னை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

விரைவில்  தேர்தல் பிரசாரத்துக்கு வருவேன், நான் பிரசாரத்துக்கு வருவேனா என்று கேட்டவர்கள் அங்கே வந்து என்னைப் பார்க்கலாம் என்று விடியோ ஒன்றில் விஜயகாந்த் கூறியிருந்தார்.

அவர் சொன்னபடியே இன்று சென்னையில் பிரசாரத்துக்கு வருகை தர உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று தேர்தலைச் சந்தித்து வருகிறது. உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் தேர்தலில் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்த நிலையில் தேமுதிக தலைமைக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜையும், மத்திய சென்னையில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பாலையும், தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனையும் ஆதரித்து விஜயகாந்த் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT