தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைவு: நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலாப் பயணிகள்

DIN

குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் குறைவாக விழுந்ததால் சுற்றுலாப்பயணிகள் நீண்டவரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.
 குற்றாலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.
 சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களும் குற்றாலம் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. எனினும், மலைப் பகுதியில் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிக்கவில்லை. பேரருவி, ஐந்தருவியில் மிகவும் குறைந்த அளவில் விழும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று குளித்துச் சென்றனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. புலியருவியில் தண்ணீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. அருவிகள் ஏமாற்றம் அளித்தாலும் சுற்றுலாப் பயணிகள் பூங்காக்களிலும், படகு சவாரியிலும் ஈடுபட்டு உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT