தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி செப்.23-ஆம் தேதி நிறைவடையும் என்றும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலை வேளையும், பிளஸ் 1 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். காலாண்டுத் தேர்வுகள் அனைத்தும் இரண்டரை மணி நேர தேர்வாக நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.