தமிழ்நாடு

காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை: சுகாதாரத் துறை செயலர் தகவல்

DIN


மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று  தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அவர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைக்காகத் தனிப்பிரிவு அமைக்கப்படும். காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள்  விரைவாக நிரப்பப்படும். கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளன.  தமிழகத்தில் 2,000 சிகிச்சை மையங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT