பயணிகள் வசதிக்காக, நாகர்கோவில்-சென்னைக்கு சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.
நாகர்கோவில்-சென்னை: நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06006) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
நாகர்கோவில்-வேளாங்கண்ணி: நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.55 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06091) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும். வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06092) புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.
இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.