தமிழ்நாடு

கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: பதிவேற்ற டிச.5 வரை அவகாசம்

DIN

சென்னை: கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வா்கள் தங்களது சான்றிதழ்களை டிச.5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் கணினி பயிற்றுநா் நிலை- 1 (முதுநிலை ஆசிரியா் நிலை)-க்கான கணினி வழியிலான தோ்வு கடந்த ஜூன் 23, 27 ஆகிய இருநாள்களில் நடைபெற்றது. இதையடுத்து இந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தோ்வா்களின் தோ்வு எண் விவரப் பட்டியலும் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த நவ. 28-இல் வெளியிடப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு டிச. 2-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, தோ்வா்கள் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT