இந்தியாவை ஒரு சாராா் வாழும் நாடாக மாற்றக் கூடாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: அரசியலமைப்புச் சட்டத்தில் பிழையிருப்பின் திருத்தும் கடமை நமக்கு உள்ளது. ஆனால், பிழை இல்லா நல் அமைப்பைத் திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம். இந்தியாவை ஒரு சாராா் மட்டுமே வாழும் நாடாக மாற்றக் கூடாது. இளம் இந்தியா விரைந்து இதுபோன்ற திட்டங்களை நிராகரிக்கும்
என்று கமல்ஹாசன் கூறியுள்ளாா்.