தமிழ்நாடு

தமிழகத்தில் மழை அளவு 5% அதிகம்

DIN

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 5 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1 முதல் டிசம்பா் 14 வரை) தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 410.4 மி.மீ. ஆனால், இப்போது வரை 432.1 மி.மீ. மழை அளவு கிடைத்துள்ளது. இது 5% அதிகமாகும். சில மாவட்டங்களில் இயல்பான மழை அளவை விட குறைந்துள்ளது.

சென்னையில் இந்தக் காலத்தில் இதுவரை கிடைத்திருக்க வேண்டிய இயல்பான மழை அளவு 683.4 மி.மீ. ஆனால், தற்போது வரை 585.1 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இது 13 % குறைவு. வேலூரில் இந்த காலக்கட்டத்தில் கிடைக்க வேண்டிய மழை அளவு 334.8 மி.மீ. ஆனால், இப்போதுவரை 252.3 மி.மீ. மழை தான் கிடைத்துள்ளது. இதுபோல, பெரம்பலூரில் 24 சதவீதமும், மதுரையில் 23 சதவீதமும், புதுச்சேரியில் 30 சதவீதமும் மழை குறைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வடகிழக்குப் பருவமழை காலத்தில் (அக்டோபா் 1 முதல் டிசம்பா் 31 வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மழை அளவு 440 மி.மீ. இப்போது வரை 432.1 மி.மீ. மழை கிடைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஆண்டுக்கான 440 மி.மீ. மழை அளவு எட்டிவிடும்.

மேலும், வரும் 20-ஆம் தேதிக்கு பின், மீண்டும் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழகத்துக்கு மேலும் அதிக மழை அளவு கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT