தமிழ்நாடு

சிறுபான்மையினரை ஒடுக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: நாராயணசாமி

DIN

சிறுபான்மையினரை ஒடுக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம், திட்டமிட்டு சிறுபான்மை மக்களை ஒடுக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராயணசாமி ஆவேசமாக குற்றம்சாட்டினார்.

மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்துவதாகக் கூறியும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரியில் சுதேசி மில் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக சட்டப்பேரைவ உறுப்பினர் சிவா மற்றும் ஜான்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, 

எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம். 

திட்டமிட்டு சிறுபான்மை மக்களை ஒடுக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. எங்கள் உயிரே போனாலும் எங்கள் அரசு சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும். தமிழகத்தில் சிறுபான்மையின மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக அரசு செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT