தமிழ்நாடு

திருப்புகழ் திருப்படி திருவிழா: அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

DIN

திருப்புகழ் திருப்படி திருவிழாவை முன்னிட்டு, அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

திருப்புகழ் திருப்படி திருவிழாவை முன்னிட்டு, டிசம்பா் 31, ஜனவரி 1 ஆகிய இருநாள்கள் அரக்கோணம்-திருத்தணி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன் விவரம்:

அரக்கோணத்தில் இருந்து இரண்டு நாள்களும் முறையே இரவு 10.10, 11.20 ஆகிய நேரங்களில் சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு முறையே இரவு 10.30, 11.40 ஆகிய நேரங்களில் திருத்தணியை அடையும். மறுமாா்க்கமாக, திருத்தணியில் இருந்து இரவு 10.40 மற்றும் 11.50 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் புறப்பட்டு, முறையே இரவு 11, அதிகாலை 12.10 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தை அடையும். இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்டத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT