தமிழ்நாடு

உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதி

DIN

உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பேராசிரியர் நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  

இந்த வழக்கில் சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பேராசிரியர் நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT