தமிழ்நாடு

 ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் வருமா?: அமைச்சர் விளக்கம்

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முயற்சிக்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

DIN


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முயற்சிக்காதது ஏன் என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் பேசும்போது, ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர வேண்டியதுதானே என்றார்.
அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டு கூறியது:
மாநில அரசு தன்னாட்சி பெற்றதாக இருக்க வேண்டும் என்று திமுக கருதுகிறதா இல்லையா? 
மாநிலத்துக்குப் பலாச் சுளைபோல வருமானம் வரக்கூடியதாக பெட்ரோல், டீசலின் மீதான வரிதான் உள்ளது. இதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கேட்க முடியுமா? பெட்ரோல், டாஸ்மாக், பதிவுத்துறை ஆகியவற்றின் மூலமாகத்தான் மாநிலத்துக்கு வருமானம் வருகிறது. இதை இழக்க முடியாது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT