தமிழக காவல்துறையில் 61 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன்
தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 26 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
முக்கியமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த வி.ராமலிங்கம் திருப்பரங்குன்றத்துக்கும், ஆர்.சித்திரைவேலு நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறைக்கும், எஸ்.வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கும், கே.தங்க வேலு மதுரை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், டி.விஜயகுமார் மதுரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும், கே.சங்கர் திருவாரூர் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், எஸ்.ராஜகுமார் தருமபுரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.