தமிழ்நாடு

ஒசூர் தொகுதியைக் காலியானதாக அறிவிக்க நடவடிக்கை: பேரவைத் தலைவர்

DIN


ஒசூர் தொகுதியைக் காலியானதாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:
விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி நம்மோடு இந்த அவையில் இருந்து பணியாற்றியவர்தான். அவர் பதவி பறிபோனது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது. அவரும் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், அவருடைய ஒசூர் தொகுதியை இன்னும் காலியானதாக அறிவிக்கவில்லை. அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டுக் கூறியது: 
அது குறித்து சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT