தமிழ்நாடு

விபத்தில் மனைவியை இழந்த நாராயணசாமியே இப்படி சொல்லலாமா? கிரண்பேடி கேள்வி

DIN


புது தில்லி: புதுச்சேரியில் ஆளுநர் - முதல்வர் இடையேயான அதிகார மோதல் குறித்து புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, ஹெல்மெட் அணியச் சொல்வது தவறா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி, ஹெல்மெட் அணியச் சொல்வது தவறா? ஹெல்மெட் கட்டாயம் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது தவறா?

மாநில  அரசின் நடவடிக்கையில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாகக் கூறுவது தவறு. இது குறித்து நாராயணசாமி எனக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், நேற்று கடிதம் கொடுத்துவிட்டு, உடனே பதில் வரவில்லை என்று தர்ணாவில் ஈடுபடுகிறார்.

ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதில் அரசுக்கு என்ன சிரமம் இருக்கிறது. சாலை விபத்தில் மனைவியை இழந்தவர் முதல்வர் நாராயணசாமி. அவரது மனைவி ஹெல்மெட் அணியாததால்தான் உயிரிழந்தார். தனது மனைவியை இழந்தவர் என்ற அடிப்படையில் அவரே ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தாமல், அலட்சியமாக இருக்கிறார் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT