தமிழ்நாடு

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

DIN

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீரர்களின் குடும்பத்திலும் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
 ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம்,
 கோவில்பட்டி வட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். பலியான இரண்டு பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
 அரசு வேலை: பலியான சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT