தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை காலமானார்

DIN


ராமநாதபுரத்தைச் சேர்ந்த வி.சுப்பிரமணியன்(86)  சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். 
ராமநாதபுரத்தில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், கடந்த இரண்டு மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவருக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா உள்பட இரண்டு மகள்கள் உள்ளனர். மறைந்த சுப்பிரமணியனின் இறுதிச் சடங்குகள் சென்னையில் உள்ள வேலங்காடு மயான பூமியில் நடைபெற்றன.
அதிமுக இரங்கல்: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியனின் மறைவுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT