தமிழ்நாடு

அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவு: தமிழிசை சௌந்தரராஜன், ராமதாஸ் இரங்கல்

DIN

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாமக நிறுவனம் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி ராஜேந்திரன் சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இந்த விபத்தில் எம்பி ராஜேந்திரன் உயிரிழந்தார் (62). ராஜேந்திரன் எம்பி மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதனிடையே அதிமுக எம்பி ராஜேந்திரன் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாமக நிறுவனம் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தமிழிசை வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
விழுப்புரம் தொகுதி அதிமுக எம்.பி சகோதரர் ராஜேந்திரன் சாலை விபத்தில் மறைந்த செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்துவாடும் தொகுதி மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலும் தேறுதலும் கூறி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
அதிமுகவைச் சேர்ந்த விழுப்பும் மக்களவை உறுப்பினர் இராஜேந்திரன் திண்டிவனத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி  அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் இராஜேந்திரன் மிகவும் எளிமையானவர். அடித்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், அரசியலில் படிப்படியாக முன்னேறி வந்தார். விழுப்புரம் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.

இராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அதிமுகவினருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT