பட்டாசு ஆலை விபத்து: நெல்லை ஆட்சியருக்கு நோட்டீஸ்
பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கோரி அந்த மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கோரி அந்த மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி வரகனூர் பட்டாசு ஆலையில் கடந்த 23-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தாமாக முன்வந்து வழக்கு: இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.