முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து: நெல்லை ஆட்சியருக்கு நோட்டீஸ்

பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கோரி அந்த மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:34 am IST
பகிர்:


பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விளக்கம் கோரி அந்த மாவட்ட ஆட்சியருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி   வரகனூர்   பட்டாசு ஆலையில் கடந்த 23-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தாமாக முன்வந்து வழக்கு: இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் 4 வாரங்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.