தமிழ்நாடு

திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

DIN

திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.  கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.

மோடி தலைமையிலான அரச தமிழகத்திற்கு நல்லதுதான் செய்கிறது. தேசிய எண்ணத்தோடு யார் வேண்டுமானாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம். பிரதமர் இந்தந்த கட்சிகள் தான் கூட்டணிக்கு வரவேண்டும் என கூறவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலினுக்கு ஏன் ஆசை வருகிறது. 

திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை. ராகுல்காந்தி தலைமையில்தான் கூட்டணி என அழுத்தமாக கூற வேண்டாமா?. ஸ்டாலின் வரிந்துகட்டி பேசுவதால்தான் ஏதோ சந்தேகம் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT