தமிழ்நாடு

சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா? அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி

DIN


விழுப்புரம்: சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா? என தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியில் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பொய்யான குற்றத்தாட்டுகளுக்கு அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின், சாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில், பத்திரிகையாளர் மேத்யூஸை கைது செய்ய எஸ்.பி. செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் தில்லி விரைந்துள்ளனர். அதுபோன்று கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சயான், ரவி ஆகியோரை பிடிக்கவும் மற்றொரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT