r4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி மற்றும் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு உறைபனி தொடரும். தமிழகத்தில் உள்மாவட்டங்களிலும் மூடு பனி நிலவும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் பனி மூட்டம் நிலவும். சென்னையில் அதிகபட்சமாக 29 டிகிரி, குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.