விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தை, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று திறந்து வைத்து வைத்தார்.
அப்போது பேசிய அவர்,
எங்கள் கனவுகளை திணிக்க மாட்டோம். உங்கள் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவோம். விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரைகள் தேவை. விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். இளைஞர்கள் அரசியலை மாற்ற தயாராகிறார்கள்.
ஓட்டுக்கு கொடுக்கும் பணம், உங்கள் பணம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கஜானாவில் உள்ள உங்கள் பணத்தை களவாணிகள் கையில் தாரை வார்த்து கொடுக்கக் கூடாது. மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவெடுக்கும்.
மக்கள் முன்வைக்கும் பிரச்னைகளுக்குதான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். தில்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்றார்.