தமிழ்நாடு

கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.டி.வி. தினகரன்

DIN


மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து அமமுகவிடம் மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் தெரிவித்தது:
மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைப்பது தொடர்பாக மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு குறித்து ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், 2014 ஆம் ஆண்டில் ஜெயலலிதா தனியாக நின்றதுபோல 40 தொகுதிகளிலும் அமமுக தனியாகப் போட்டியிடும். 
திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளருக்கு ஆதரவு அதிகமாக இருந்ததால்தான் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் தேர்தலைப் போராடி ரத்து செய்தன. 
அதேபோல, தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவு அமமுகவுக்கு முழுமையாக உள்ளது. 40 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும். 
அதிமுக, திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். திமுகவினர் கோரும் ஒப்பந்தப்புள்ளிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. அதிமுகவும், திமுகவும் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளனர் என்றார் தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT