தமிழ்நாடு

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: ஒருவர் பலி;16 பேர் காயம்

DIN


திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டிராவல் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர். 

சென்னை புரசைவாக்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன், இன்று அதிகாலை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளனாது. இதில், வேனில் இருந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT