திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டிராவல் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர்.
சென்னை புரசைவாக்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன், இன்று அதிகாலை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்த போது திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளனாது. இதில், வேனில் இருந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.