தமிழ்நாடு

வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: ஜூலை 12 -இல் முதல்கட்ட கலந்தாய்வு

DIN


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 12 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 11 பட்டப் படிப்புகளில் உள்ள 3,905 இடங்களுக்கு, 2019-20 -ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 51,876 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.
 அவர்களில் 41,590 பேர் உரிய கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களை சமர்ப்பித்திருந்தனர். இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 12 -ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 15 -ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.
 இதில் பங்கேற்றவர்களுக்கு கல்லூரி வாரியான பாடப் பிரிவு ஒதுக்கீடு ஜூலை 19 -இல் நடைபெறும். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 23 முதல் 25 வரை நடைபெறும். 
இதையடுத்து முதல்கட்ட விருப்ப அடிப்படையிலான நகர்வு முறை நடைபெறும். இதையடுத்து இரண்டாம் கட்ட விருப்ப அடிப்படையிலான நகர்வு முறை நடைபெறும். இதில் பங்கேற்பவர்களுக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி கல்லூரி வாரியான பாடப் பிரிவு ஒதுக்கப்படும். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறும். சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 12 -ஆம் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தொழில் நிறுவன உபயதாரர் பிரிவுக்கான கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை ஆகஸ்ட் 6 -ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
 இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்த பிறகு ஆகஸ்ட் 21 -ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஆகஸ்ட் 31 -ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 அதேபோல பட்டயப் படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இதில் பங்கேற்பவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் செப்டம்பர் 5 -ஆம் தேதிக்கு முன்பு நேரில் ஆஜராக வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 11, 12 -ஆம் தேதிகளில் நடைபெறும். 
இதில் பங்கேற்பவர்கள் செப்டம்பர் 16 -ஆம் தேதிக்கு முன்பு நேரில் ஆஜராக வேண்டும். பட்டயப் படிப்புகளுக்கு செப்டம்பர் 16 -ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT