தமிழ்நாடு

சட்டத்தில் ஓட்டையாம்.. சொல்கிறார் பாஜகவின் எச். ராஜா! 

DIN


சட்டத்தில் ஓட்டை இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்தத் தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.

அதுவும் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே இதனைப் பதிவு செய்துள்ளார். அதற்குக் காரணம் என்னவென்று விரிவாகப் பார்க்கலாம்.

டிவிட்டர் பக்கத்தில் எச். ராஜா கூறியிருப்பதாவது, நீதிமன்றத்தால் தேசவிரோதி என உறுதி செய்யப்பட்ட நபர் மாநிலங்களவை உறுப்பினரா. சட்டத்தில் ஓட்டை என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, வைகோ மீது தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வேட்பு மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

விவசாயிகளுக்கு கோடை பருவ நெல் நடவு பயிற்சி

எலக்ட்ரிக் கடையில் இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT