தமிழ்நாடு

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு தமாகா ஆதரவு

DIN


வேலூரில் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவளிப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசும், மத்தியில் ஆளும் பாஜக அரசும் தொடர்ந்து நல்லாட்சி செய்து வருவதால் அந்தக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெறச் செய்து, வேலூர் தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு நல்வழி வகுக்க வேண்டும் என்பது தமாகாவின் எண்ணமாகும்.
எனவே ஆகஸ்டு 5- ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு நடைபெற இருக்கும் தேர்தலில் ஏ.சி. சண்முகத்தைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய நான் (ஜி.கே.வாசன்) உள்பட வேலூர் தொகுதி தமாகாவினர் அனைவரும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்போம் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT