தமிழ்நாடு

நிறைவு பெற்றது அத்திவரதரின் சயன கோல தரிசனம் 

கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த அத்திவரதரின் சயன கோல தரிசனம் புதன்கிழமை மாலை ஐந்து மணியோடு நிறைவுக்கு வந்தது. 

DIN

காஞ்சிபுரம்: கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த அத்திவரதரின் சயன கோல தரிசனம் புதன்கிழமை மாலை ஐந்து மணியோடு நிறைவுக்கு வந்தது. 

நாற்பது வருடங்களுக்கு ஓருமுறை நீருக்குள்ளிருந்து வெளியில் வந்து  பக்தர்களுக்குக் காட்சி   தரும் அத்திவரதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் வஸந்தமண்டபத்தில் எழுந்தருளி, கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார். 

இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல தரிசனம் புதன்கிழமை மாலை ஐந்து மணியோடு நிறைவுக்கு வந்தது.  

நாளை (ஆகஸ்ட் 1) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளிக்கிறார்.  

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் காணத் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதலாக மூன்றாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

பனியும் சுடுகிறது... ஶ்ரீத்து கிருஷ்ணன்

தீராக் கனவுகள்... கேப்ரியல்லா

கொளுத்தும் வெயில்... நேஹா மாலிக்

SCROLL FOR NEXT