நிறைவு பெற்றது அத்திவரதரின் சயன கோல தரிசனம்
கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த அத்திவரதரின் சயன கோல தரிசனம் புதன்கிழமை மாலை ஐந்து மணியோடு நிறைவுக்கு வந்தது.
காஞ்சிபுரம்: கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த அத்திவரதரின் சயன கோல தரிசனம் புதன்கிழமை மாலை ஐந்து மணியோடு நிறைவுக்கு வந்தது.
நாற்பது வருடங்களுக்கு ஓருமுறை நீருக்குள்ளிருந்து வெளியில் வந்து பக்தர்களுக்குக் காட்சி தரும் அத்திவரதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் வஸந்தமண்டபத்தில் எழுந்தருளி, கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தந்து வருகிறார்.
இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல தரிசனம் புதன்கிழமை மாலை ஐந்து மணியோடு நிறைவுக்கு வந்தது.
Advertisement
Advertisement
நாளை (ஆகஸ்ட் 1) முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளிக்கிறார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அத்திவரதரை நின்ற கோலத்தில் காணத் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதலாக மூன்றாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.