தமிழ்நாடு

3 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பில்லை

DIN

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும் இன்றைய கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

SCROLL FOR NEXT