மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதையொத்த பணியிடங்களில் பணியாற்றும் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள்):
1. எஸ்.சாந்தி - முதன்மைக்கல்வி அலுவலர், திருச்சி (முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர்).
2. எம்.இராமகிருஷ்ணன்- முதன்மைக் கல்வி அலுவலர், தஞ்சாவூர் (முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி).
3. பி.சாந்தா- முதன்மைக் கல்வி அலுவலர், திருப்பூர் (முதன்மைக் கல்விஅலுவலர், தஞ்சாவூர்).
4. அ.ஞானகௌரி- முதன்மைக் கல்வி அலுவலர் தூத்துக்குடி (துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை).
5. டி.முருகேசன்- துணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை (முதன்மைக் கல்வி அலுவலர், தூத்துக்குடி).
6. எம்.கே.சி. சுபாஷினி- முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர் (முதன்மைக் கல்வி அலுவலர் மதுரை).
7. ஆர். சுவாமிநாதன்- முதன்மைக் கல்வி அலுவலர், மதுரை ( முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர்). இந்தப் பணியிட மாறுதல் உடனடியாக அமலுக்கு வருவதாக முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.