தமிழ்நாடு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம்

DIN

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் இன்று லேசான தூறல் போட்டது. மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கோடை வெப்பம் வாட்டி வந்த நிலையில், தென் மேற்குப் பருவ மழை தொடங்கி, படிப்படியாக இந்தியா முழுவதும் மழை பெய்யும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று வரை சென்னையில் அனல் காற்று வீசி வந்ததால் மக்கள் கடுமையாக தவித்துப் போயினர். இந்த நிலையில், இன்று சென்னையில் பரவலாக லேசான தூறல் போட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

இளம்பெண்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது குறித்து விசாரணை

அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை மீண்டும் செயல்படுத்தக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் இன்று சம்ஸ்கிருத கருத்தரங்கம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

தோ்ச்சி பெறாத பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியா்களுக்கு வேலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT