தமிழ்நாடு

சென்னையில் ட்ரை வாஷ் முறைக்கு மாறும் ராயல் என்ஃபீல்ட்: எவ்வளவு தண்ணீர் மிச்சமாகும்?

PTI


சென்னை: புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும் இன்று முதல் ட்ரை வாஷ் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து சர்வீஸ் மையங்களிலும், சர்வீஸுக்கு வரும் வாகனங்களை தண்ணீர் இல்லாமல் (மிகக் குறைந்த தண்ணீரில்) ட்ரை வாஷ் முறையில் சுத்தப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தியிருப்பதால் சுமார் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் மிச்சமாகுமாம் ஒவ்வொரு மாதமும். 

பல காலமாக இது தொடர்பாக சோதனை செய்து, மிக முக்கியமான ஒரு விஷயத்தை செயல்படுத்தியிருப்பதாகவும், அதே சமயம், வாடிக்கையாளர்களின் திருப்தியில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால், முதல் முறையாக சென்னையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT