தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனப் பேரணி

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

DIN

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செவ்வாய் காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதேசமயம் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தரப்பில் பேரணி நடத்தப்பட்டது. பேரணி முடிவில் பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மனு அளித்தனர்.

பேரணியில் அக்கட்சியின் சார்பாக நடிகை ஸ்ரீபிரியா, கவிஞர் சிநேகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவா் கைது

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT