நியூஸிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உலகின் இரண்டாவது அமைதி நிறைந்த நாடான நியூஸிலாந்தில், மசூதிக்குள் நுழைந்து, குழந்தைகள் உள்ளிட்ட 49 இஸ்லாமியர்களை, பயங்கரவாதிகள் படுகொலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 2 இஸ்லாமியர்கள் காயமடைந்ததாகவும், 9 பேரைக் காணவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. காயமடைந்த இருவருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளார்.