தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

DIN


மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. 

17-ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறது. இதில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக பொதுச் செயலாளர் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம், சிதம்பரம் தொகுதியில் அவர் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். 

முன்னதாக, மோதிரம் சின்னத்தை வழங்குமாறு திருமாவளவன் கேட்டிருந்தார். ஆனால், அது வழங்கப்படவில்லை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT