சென்னையின் புறநகர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையின் மாதாவரம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனை மாதவரம் போலீஸார் கண்டுபிடித்து, அங்கிருந்து 30 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்து, ராஜேஷ், பூபதி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனவும் கூறப்படுகிறது.