அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், 3 முன்னாள் அமைச்சர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
மூன்று முன்னாள் அமைச்சர்கள்: ஆண்டிப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று தகுதி நீக்கத்தால் எம்.எல்.ஏ., பதவியை இழந்த தங்க தமிழ்ச்செல்வன், பி.பழனியப்பன் ஆகியோர் அமமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்களான ஜி.செந்தமிழன், கே.பாண்டுரங்கன், பழனியப்பன் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் களம் காணஉள்ளனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி, ஒசூர் பேரவைத் தொகுதி ஆகியவற்றை தவிர்த்து மற்ற அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அமமுக அறிவித்துள்ளது.
முதல்கட்ட பட்டியலில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 9 பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட பட்டியலில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மக்களவைத் தொகுதிகள்
வடசென்னை பி.சந்தானகிருஷ்ணன்
அரக்கோணம் என்.ஜி.பார்த்திபன்
வேலூர் கே.பாண்டுரங்கன்
கிருஷ்ணகிரி ச.கணேசகுமார்
தருமபுரி பி.பழனியப்பன்
திருவண்ணாமலை ஏ.ஞானசேகர்
ஆரணி ஜி.செந்தமிழன்.
கள்ளக்குறிச்சி கோமுகி மணியன்
திண்டுக்கல் பி.ஜோதிமுருகன்
கடலூர் கே.ஆர்.கார்த்திக்
தேனி தங்க தமிழ்ச்செல்வன்
விருதுநகர் எஸ்.பரமசிவ ஐயப்பன்
தூத்துக்குடி ம.புவனேஸ்வரன்
கன்னியாகுமரி இ.லட்சுமணன்
பேரவை இடைத் தேர்தல் தொகுதிகள்
சோளிங்கர் டி.ஜி.மணி
பாப்பிரெட்டிபட்டி டி.கே.ராஜேந்திரன்.
நிலக்கோட்டை (தனி) ஆர்.தங்கதுரை.
திருவாரூர் எஸ்.காமராஜ்.
தஞ்சாவூர் எம்.ரங்கசாமி.
ஆண்டிப்பட்டி ஆர்.ஜெயக்குமார்.
பெரியகுளம் (தனி) கே.கதிர்காமு.
விளாத்திகுளம் கே.ஜோதிமணி.
தட்டாஞ்சாவடி (புதுவை) என்.முருகசாமி.