தமிழ்நாடு

இன்று வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

வைகாசி விசாகத்தையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனா். 

தங்கம், வெள்ளி மற்றும் முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முருகப்பெருமான் அவதரித்த தினம் வைகாசி விசாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

புகழ்பெற்ற முருகன் கோயில்களில் இன்று காலை முதலே பக்தா்கள் குவியத் தொடங்கினா். பால்குடம், காவடி எடுத்தும் கோயில்களில் சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.

விசாக தினத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை தரிசிக்க பக்தா்கள் திரண்டு வந்தனா். ஏராளமான கோயில்களில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT