கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இரவு நேரங்களில் உலவி வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டிவிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேக்கம்பட்டி, கெண்டேபாளையம், அரசனூர், கிட்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சுற்றிலும் அடர்ந்த வனப் பகுதி, விவசாய நிலங்கள் உள்ளன. இந்த வனப் பகுதியில் காட்டு யானை, மான், மயில், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது உணவு, குடிநீரைத் தேடி குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இந்நிலையில் தேக்கம்பட்டி பகுதியில் கடந்த 10 நாள்களாக இரவு நேரங்களில் உணவு
தேடிவரும் ஒற்றை காட்டு யானை, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னை, பாக்கு, காய்கறி பயிர்களை சேதப்படுத்தி அழித்து வருகிறது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இரவில் காட்டு யானை நடமாடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் தேக்கம்பட்டி குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை வியாழக்கிழமை அதிகாலை உலவி வந்தது. இந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கான
நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.