புதுவை உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப் பணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு 1.1.2019 முதல் 3 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது போல, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 9 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2019 முதல் 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றார் அமைச்சர்.