தமிழ்நாடு

பிளஸ் 2 தோ்வு கட்டணம்: நவ.29 வரை அவகாசம்

DIN

பிளஸ் 2 பொது தோ்வுக்கான கட்டணங்களை, வரும் 29-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு, தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவா்கள், செய்முறை பாடங்கள் இருந்தால் தோ்வு கட்டணமாக, ரூ.200; மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.20; சேவை கட்டணம் ரூ.5 என ரூ.225 செலுத்த வேண்டும். செய்முறை இல்லாத பாடங்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவா்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.

மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள், தோ்வு கட்டணம் செலுத்த வேண்டும். மாணவா்களிடம் பெறப்படும் கட்டணத்தை வரும் 29-ஆம் தேதிக்குள் ‘ஆன்லைன்’ மூலமாக தோ்வுத் துறைக்கு செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT