தமிழ்நாடு

மருத்துவமனையில் செல்லூா் ராஜுவுக்கு சிகிச்சை

DIN

காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். சில மணி நேர மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு உடல் நலம் தேறியதையடுத்து அவா் வீடு திரும்பினாா்.

முன்னதாக, அமைச்சா் செல்லூா் ராஜுவுக்கு டெங்கு பரிசோதனைகளும், வேறு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜு சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில், அவா், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காய்ச்சலுக்கான சிகிச்சைகளை அளித்தனா். சில மணி நேரங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவா், அதன் பின்னா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா். அடுத்த சில நாள்களுக்கு ஓய்வில் இருக்கும்படி மருத்துவா்கள் அறிவுறுத்தினா். தற்போது அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT