தமிழ்நாடு

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை

DIN

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை, திருவாரூர் தொகுதி திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் அசோகன். இவர், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 11 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேசமயம் வழக்கில் அசோகனின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தண்டனையை நிறுத்து வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT