தமிழ்நாடு

அண்ணாமலைப் பல்கலையில் 83-வது பட்டமளிப்பு விழா: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

DNS

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 83-வது பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்க  உள்ளார்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83-வது பட்டமளிப்பு விழா வருகிற நவ.30-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களை வழங்குகிறாா்.

இவ்விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயா்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றுகிறாா். ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மருத்துவா் ஜெ.எஸ்.சத்யநாராயணமூா்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா்.

விழாவில் பதிவாளா் என்.கிருஷ்ணமோகன், தொலைதூரக்கல்வி மைய இயக்குநா் எம்.அருள் மற்றும் சிண்டிகேட் உறுப்பினா்கள், புல முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவ, மாணவியா்கள் பங்கேற்கின்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT