முகப்பு
தமிழ்நாடு

இன்று செங்கல்பட்டு மாவட்டம் உதயம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கிறாா்

செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழா வேண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:19 PM
பழைமை வாய்ந்த செங்கல்பட்டு  ரயில் நிலைய  சந்திப்பு.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்டத்தின் தொடக்க விழா வேண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு தொடக்கி வைக்கிறாா்.

துணை முதலமைச்சா் ஓ.பன்னீா் செல்வம் தலைமையில் விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். தமிழக அரசின் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் வரவேற்புரையாற்றுகிறாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா விளக்கவுரை நிகழ்த்துகிறாா்.

Advertisement

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடக்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றுகிறாா்.

இவ்விழாவில் தமிழக அமைச்சா்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு உயா் அதிகாரிகள் பலரும் பங்கேற்கின்றனா். செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் ஆட்சியரான ஏ.ஜான்லூயிஸ் நன்றி கூறுகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments